’மகா அவதார் நரசிம்மா’ திரைப்பட விமர்சனம்!

111

 

 

 

சென்னை:

விஷ்ணுவின் தீவிர பக்தரான சிறுவன் பிரகலாதனின் கதையும், பிரகலாதனின் பக்தியால் பரவசமடைந்த விஷ்ணு, நரசிம்மர் அவதாரம் எடுத்து அசுரன் இரன்யகசுபுவை அழித்ததும் தான் ’மகா அவதார் நரசிம்மா’.

தெரிந்த கதை என்றாலும், அதை தற்போஒதைய தலைமுறையினர் தெரிந்துக்கொள்ள வேண்டிய நோக்கத்துடனும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து மகிழும்படியான அனிமேஷன் திரைப்படமாக கொடுத்திருக்கிறார்கள்.

 

சிறுவர்களுக்கு புரியும்படியும், ரசிக்கும்படியும் கதையை நகர்த்தியிருப்பதோடு, பிரமாண்டமான அனிமேஷன் காட்சிகள் மூலம் வியக்க வைத்திருக்கிறார்கள்.

 

பொழுதுபோக்கு மற்றும் குழந்தைகளுக்கான படமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டிருந்தாலும், புராண கதைகளை குழந்தைகள் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் படத்தினை உருவாக்கியிருக்கிறார்கள்.

 

அனிமேஷனையும் மிகச் சரியாக கையாண்டிருக்கின்றனர் படக்குழுவினர். குறிப்பாக கிளைமாக்ஸில் நரசிம்ம அவதாரமும், அவர் அசுரனை அழிப்பதும் மெய்சிலிர்க்க வைக்கிறது.

 

வசன உச்சரிப்பு, இசை, காட்சியமைப்பு என அனைத்தையும் சரியாக கையாண்டு சிறந்த திரையரங்க அனுபவத்தை கொடுக்கும் திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார்கள்.

 

இதுவரை திரைப்படங்களில் நாம் பார்த்த பிரகலாதன் பற்றிய படங்களில் வரும் கதாபாத்திரங்களை இதில் முற்றிலும் மாறுபட்ட வடிவத்திலும், பிரமாண்டமாகவும் உருவாக்கியிருப்பது படத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்த்திருக்கிறது.

அனிமேஷன் தரம், இசை அமைப்பு, வசன உச்சரிப்பு அனைத்தும் அழுத்தமான தரத்தில் இருக்கின்றன. குழந்தைகளும் மாணவர்களும் புராணங்களை எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் படத்தை அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து பள்ளிகளிலும் இப்படம் திரையிடப்பட்டால், புத்தகம் வாசித்த அனுபவத்தைத் தரும்.

முடிவில் சொல்லப்போகிறதென்றால் – “நரசிம்ம அவதாரம்” ஒரு தரமான அனிமேஷன் முயற்சி.  குடும்பமாக சென்று  கண்டிப்பாக ரசிக்க வேண்டிய படம்.

மொத்தத்தில், ‘மகா அவதார் நரசிம்மா’ மிகச்சிறந்த  அனுபவத்தை கொடுக்கும்.

 

ரேட்டிங் 3/5